வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் பட்டியல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை), கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.17) தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தல் அன்று, வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்த கூடிய ஆவணங்கள் குறித்த பட்டியலை தெரிவித்துள்ளார். அதன்படி,

1.வாக்காளர் அடையாள அட்டை

2.ஆதார் அட்டை

3.மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை)

4.கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால்

புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

5.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

(மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

6.ஓட்டுனர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை)

7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது)

8.வருமான வரி (நிரந்தர கணக்கு எண் அட்டை)

9.ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

10.இந்திய கடவுச்சீட்டு 10 ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

11.அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது)

12.அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது) ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...