4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் – சிங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில், இந்தியா கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஏப்ரல்.17) பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் 27 கோடி பயணங்களை இம்மாவட்ட மகளிர் மேற்கொண்டு உள்ளனர் என்றார். இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.900 வரை சேமித்து உள்ளனர் என்றார். புதுமை பெண் திட்டம் மூலம், கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரி கல்வி பயிலும் 14,000 மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பெறுகின்றனர். 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தினமும் 80,000 மாணவ மாணவிகள் சத்தான உணவை உண்ணுகின்றனர் என்றார்.



மேலும் அவர் கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.



கோவை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உதய சூரியன் சின்னம் களத்தில் இறங்கியுள்ளது. எனவே குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கோவை மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...