இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயனுக்கு ஆதரவாக திருப்பூரில் இருசக்கர வாகன பேரணி

அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது.



தமிழக முழுவதும் இறுதி கட்ட பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாண்டியன் நகர் பகுதியில் தொடங்கி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை மையப்படுத்தும் வகையிலான வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளையும், மத்திய பாஜக தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஒலிபெருக்கியில் பேசியவாறு பேரணியாக வந்தனர். இந்த பேரணியில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், வேட்பாளர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...