திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் அமைச்சர் கயல்விழி பிரச்சாரம்

வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அமைச்சர் கயல்விழி வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் 3 ஆம் வார்டு பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக நடந்து சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.



அப்போது தப்பாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் திமுகவின் மூன்று ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலை குறைக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

3, ஆம் வார்டு கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் பிரச்சார ஏற்பாடுகளை செய்திருந்தார். நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மூத்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...