திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள். ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசு கலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: பப்ளிக் பாலிசி ரிசர்ச் சென்டர் எனும் மய்யம் தயாரித்த 'லட்சியங்களை கைவிட்ட திமுக' எனும் அறிக்கையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை ராம் நகரில் உள்ள தனியார் விடுதியில்இன்று (ஏப்ரல்.16) வெளியிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுவதை மாநில அரசு புறக்கணித்து விட்டது. விவசாயிகளுக்கான நீர் ஆதாரம் குறைந்து உள்ளது. தமிழ்நாடு வளர்ந்து விட்டது என்று திமுக பொய் சொல்லி வருகின்றனர்.



ஆன்மீக சுற்றுலா பயணிகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் திமுக அரசு கோவில்களை இடிப்பது, கடவுள்களை கொச்சை படுத்தி இழிவாக பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் தொழில்கள் குறைந்து உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது.



மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள். ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசுகலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது.கர்நாடகாவில் காங்கிரஸ் அமைந்த பிறகு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். அது குறித்து அமைச்சர் துரைமுருகன் சட்ட பேரவையில் ஏதும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என்று கூறினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...