உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள் முழங்க வானவேடிக்கை உடன் உடுமலை - பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் நிகழ்வாக பூச்சொரிதலும் அதைத் தொடர்ந்து நோன்பு சாட்டுதலும் நடைபெற்றது. 2-வது நிகழ்வாக கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள், வானவேடிக்கை முழங்க உடுமலை- பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.



அதைத் தொடர்ந்து கம்பம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பீடத்தில் போடப்பட்டது. பின்னர் பூவோடு கோவிலை மூன்று முறை வலம் வந்து கம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...