கோவை வரும் ரயில்களின் நேரம் மற்றும் சேவையில் மாற்றம் - கோவை தெற்கு ரயில்வே அறிவிப்பு

இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது. இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏப்ரல்.16 வெளியிட்டுள்ள அறிக்கையில், போத்தனூர் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பின்வரும் ரயில்கள் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது. இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில் 2 நிமிடம் நிறுத்தப்படும்.

ரயில் எண்.06819 ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதனால் சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது.

ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ௳த்திய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

ரயில் எண்.22504 திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதன் விளைவாக கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் நிறுத்தம் தவிர்க்கப்படும்.

பின்வரும் ரயில் 17.04.2024 அன்று மாற்றியமைக்கப்படும். ரயில் எண்.06805 வழக்கமாக கோயம்புத்தூர் - ஷோரனூர் ரயில், கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 11.55 மணிக்குப் புறப்படும், 17ம் தேதி கோவையில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...