கோவை உப்பிலிபாளையம் என்டிசி மில் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நான்கு ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள NTC ஆலைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காத பாஜக அரசுக்கு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள என்டிசி மில் முன்பு அண்ணாமலை பொய் பேசுவதை கண்டித்து, உப்பிலிபாளையம் என்டிசி மில் முன்பு அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று (ஏப்ரல்.15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் எஸ்.எம்.எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் நான்கு ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள NTC ஆலைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்தும், 10-ஆண்டுகளாக கோவை தொழில் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாத பாஜக பிரதிநிதியாக தற்போது அண்ணாமலை வேட்பாளராக நின்று கொண்டு கோவையை அபிவிருத்தி செய்வேன் என்று சொல்வதை நம்ப இயலாது என்றும், ஏற்க மாட்டோம் எனச் சொல்லியும் என்.டி.சி காலி நிலங்களை தனியாருக்கு விற்கிற நோக்கத்தில் அண்ணாமலை தொழில்துறை இடம் பேசியதை கண்டித்தும், என். டி. சி. நிலங்களை ஒருபோதும் தனியாருக்கு தாரை வார்க்க விடமாட்டோம் என கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் அமைப்பு செயலாளர் மனோகரன், ஏஐடியுசி சங்கத்தின் மூத்த தலைவர் எம். ஆறுமுகம், சிஐடியு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்மநாபன், MLF தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர் மு.தியாகராஜன், INTUC சங்கத்தின் துணைத் தலைவர் வெங்கடசாமி, NDLF தொழிற்சங்கத்தின் தலைவர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...