ஈஷாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு - பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு

சூர்யகுண்டம் மண்டபம் முன்பு நடைபெற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நாட்டுபுற இசை, நடனம் மற்றும் களரிபயட்டு கலை நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.


கோவை: ஈஷாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.



மேலும் ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள் தேவி திருமேனியுடன் கூடிய ரதத்துடன் லிங்க பைரவி கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். நம் பாரத தேசத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக அந்தந்த மாநிலங்களில் புத்தாண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே வேளையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மஹாராஷ்ட்ரா, காஷ்மீர், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் இப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஈஷாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக் கூடி தமிழ் புத்தாண்டை கோலாகலாமாக கொண்டாடினர்.

மேலும் சூர்யகுண்டம் மண்டபம் முன்பு நடைபெற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நாட்டுபுற இசை, நடனம் மற்றும் களரிபயட்டு கலை நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.



ஈஷாவை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தேவி திருமேனியுடன் கூடிய ரதத்துடன் மலைவாசலில் இருந்து லிங்க பைரவி கோவில் வரை ஊர்வலம் வந்தனர். மேலும் அவர்கள் பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணம் செய்து வழிபட்டனர்.



பின்னர் லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் ஆதியோகியை காண பெருந்திரளாக திரண்டிருந்தனர்.



அத்துடன் ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற ஒலி ஒளிக் காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...