சொத்து பிரச்னை காரணமாக தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், (60). இவரது தந்தை ராமசாமி மற்றும் இரண்டு சகோதாரர்கள் பாலசுப்ரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சொத்து தகராறு ஏற்பட்டது. இவ்வழக்கு தாராபுரம் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை கோர்ட் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்ற முயன்றும் முடியவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவிந்தம்மாள் தன் தாயை கட்டையால் தாக்கியது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...