சொத்து பிரச்னை காரணமாக தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், (60). இவரது தந்தை ராமசாமி மற்றும் இரண்டு சகோதாரர்கள் பாலசுப்ரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சொத்து தகராறு ஏற்பட்டது. இவ்வழக்கு தாராபுரம் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை கோர்ட் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்ற முயன்றும் முடியவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவிந்தம்மாள் தன் தாயை கட்டையால் தாக்கியது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...