வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஐன்பது ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லும் பணத்தை சோதனை செய்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.



இதில் வால்பாறை பகுதியில் முதன்மை பறக்கும் படை குழுவினர் மற்றும் இரண்டாம் நிலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர. நள்ளிரவு ஒரு மணி அளவில் வால்பாறை டவுன் பகுதியில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Fst 3,124 b d o பாலசுப்ரமணியம் மற்றும் காவல் துறையினர் ஜகவர் மற்றும் வீடியோ கிரபார் விமல், இராணுவ வீரர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...