திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு கேட்டு தாராபுரம் ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்த திமுகவினர்

முகமதியா நகரில் உலமா சபை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தாவூதியையும், உலமா சபை நிர்வாகிகளையும் சந்தித்து திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு அளிக்குமாறு தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் சென்று நிர்வாகிகள் வாக்கு கேட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுகவினர் தாராபுரம் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில் தாராபுரம் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளை அதன் அலுவலகமான முகமதியா நகரில் வைத்து உலமா சபை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தாவூதியையும், உலமா சபை நிர்வாகிகளையும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கோவை மாநகர மாவட்ட துணை செயலாளருமான கோட்டை அப்பாஸ்தலைமையில் இன்று நகரச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார்,ஆகியோர் சந்தித்து இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டனர்.



இந்நிகழ்வில் அயலக அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ், ஆறாவது வார்டு கிளைக்கழக செயலாளர் அக்பர் பாஷா, ஐந்தாவது வார்டு பிரதிநிதி நாசர்உசேன், ஆறாவது வார்டு கவுன்சிலர் முபாரக் அலி, ஜீவா ஷாஜகான், பூத் பொறுப்பாளர்கள் மௌலானா, சையது இப்ராஹிம், ஜாபர் சாதிக், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கர், நகர சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஏ.ஆர்.அபுதாகிர், 6வார்டு அவைத் தலைவர் அப்துல் ஹமீது, பேங்க் அப்பாஸ், கறிக்கடை அபூபக்கர் சித்திக், தாஜ் ஜாபர் சாதிக், பாவா மைதீன், முகமது தாரிக், தொண்டரணி ஷாஜகான், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...