அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள புத்தர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கலந்துகொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட செல்வபுரம் கிராமத்திற்கு அருகில் மலை அடிவார பகுதியில் புத்த சீடர்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தர் கோவில் அமைத்து பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.



இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கோவிலுக்கு வருகை புரிந்தார். அதன் பின் உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுதல், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் எந்த ஒரு வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழ் புலிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மடத்துக்குளம் ஊடகப்பிரிவு நம்பிராஜன், எலையமுத்தூர் திமுக கிளை தலைவர் பழனிச்சாமி, கோவை ஆனந்தன், புத்தர் கோவில் ஆலய நிர்வாகிகள் காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...