இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர்  -  தமிழக முதல்வருடன் சந்திப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.


கோவை: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து முதல்வரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை வந்திருந்தார். 

அப்போது அவரை சந்தித்த கோவையை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் அவர்களது கோரிக்கையை ஏற்று சிறைவாசிகளை நிபந்தனை இன்றி விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறி பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 



இது குறித்து தெரிவித்துள்ள இஸ்லாமிய கூட்டமைப்பினர்,

ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கவும், அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை காக்கவும், சிறுபான்மை சமூக மக்களின் நலனை மீட்கவும், மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். 

இந்தியாவின் மிக சிறந்த மனிதநேய நடவடிக்கையாக 

2021 ஆம் ஆண்டு, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு முன்வைத்த முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை ஏற்று, எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் சிறைவாசிகள் விடுதலை செய்த திமுக அரசின் மனிதநேய நடவடிக்கைக்கு கோவை இஸ்லாமியகூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் மனிதநேய மக்கள் ஆட்சி அமைய, கோவை கூட்டமைப்பின் முயற்சிகள் மற்றும் களப்பணிகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து, 

சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. 



அதன்படி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களான - கோவை தொகுதி திமுக வேட்பாளர்கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு வழங்குவதற்கான, ஆதரவு நிலைப்பாடு கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர்,கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...