அவிநாசியில் மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.


திருப்பூர்: நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து அவிநாசி பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.



பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெண்கள் நலத் திட்டங்களான அனைத்து பெண்களுக்கும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.



மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பெண்களின் மத்தியில் எடுத்துரைத்தது பெரும் வரவேற்பை பெற்றது. அங்கு கூடி இருந்த பெண்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று ஒருமித்த குரலில் கூறினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...