வால்பாறை அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல்

எஸ்டேட் நிர்வாகத்திடம் தீ பற்றி எறிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடு தர வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி வலியுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் ஐந்து வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.



இதில் வீட்டிலிருந்த டிவி, பீரோ கட்டில், துணிமணிகள் பணம், நகை மற்றும் சர்டிபிகேட் மற்றும் உணவுப் பொருள்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீ பிடித்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டதால் உயிர் சேதம் இன்றி தப்பினர். இது தொடர்பாக வால்பாறையில் உள்ள பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.



மேலும் இதுபோன்று தீ விபத்துகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி எஸ்டேட் நிர்வாகத்திடம் தீ பற்றி எறிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடு தர வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும், இது போன்று விபத்துகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் மயில் கணேசன் மற்றும் தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் வீ அமீது மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...