தாராபுரத்தில் நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள எடுத்துக்கூறி நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.



தாராபுரம் பெரிய கடைவீதியில் உள்ள மரக்கடை பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா மினி கிளினிக், உள்ளிட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கியது குறித்தும், திமுக அரசின் தற்போதைய சொத்துவரி, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆகியவற்றை எடுத்துச் சொல்லியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி சிறுபான்மை மக்களுக்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அரசில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லியும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார்.

இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் எஸ். டி. பி. ஐ. கட்சி தேமுதிக ஆகிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...