காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு

என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில், அய்யாசாமி நகர், மூர்த்திரெட்டி பாளையம், தட்டான் தோட்டம், களிமேடு, செம்மங்காலிபாளையம் ஆகிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.



நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில், என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் நகர பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் எனவும் கூறினார். உங்களுக்காக இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இதில், மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...