திமுக தேர்தல் வாக்குறுதியாக மகாலட்சுமி திட்டத்திற்கு வருடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் - வெள்ளகோயிலில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

தேர்தல் வாக்குறுதியாக இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளில் ஒன்றான எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும் என்று திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோயில் நகர பகுதிகளில் இன்று ஈரோடு நாடளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ்பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிகாலை 6 மணி அளவில் துவங்கிய தேர்தல் பிரச்சாரம் வார்டு வாரியாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்விற்கு வெள்ளகோயில் நகர செயலாளர் சபரி எஸ் முருகானந்தம் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட நான்காம் மண்டல தலைவர் இலா பத்மநாபன் முன்னிலை வைத்தார். களத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு இன்று வெள்ளகோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளோம். தேர்தல் வாக்குறுதியாக இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளில் ஒன்றான எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும்.



மேலும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட மதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 70 க்கு விற்பனை செய்யப்படும். மகளிருக்கான முக்கிய திட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகாலட்சுமி திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வருடம் ரூபாய் ரூ. 1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் அடுத்து ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1500 ஆக கூட வழங்கும் வாய்ப்புள்ளது. மேலும் பல விதமான திட்ட உதவிகளையும் அனைத்து பஞ்சாயத்து ஊராட்சி,நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டது. மேலும் வெள்ள கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் எனவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...