சென்னையில் இருந்து கோவை வழியாக கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து ஏப்ரல் 11, 18, 25ம் தேதிகளில் மாலை 6.25க்கு (06044)புறப்பட்டு, முறையே மறுநாள் காலை 10.40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் 14 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...