கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே மே இறுதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோயம்புத்தூர்-பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று ஏப்ரல்.10 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சேகுட, சூரத், அகமதாபாத் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06181 கோயம்புத்தூர் - பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 06182 பகத் கி கோதி - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30க்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 9.30க்கு கோவை வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...