கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே மே இறுதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோயம்புத்தூர்-பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று ஏப்ரல்.10 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சேகுட, சூரத், அகமதாபாத் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06181 கோயம்புத்தூர் - பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 06182 பகத் கி கோதி - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30க்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 9.30க்கு கோவை வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...