கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே மே இறுதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோயம்புத்தூர்-பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று ஏப்ரல்.10 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சேகுட, சூரத், அகமதாபாத் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06181 கோயம்புத்தூர் - பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 06182 பகத் கி கோதி - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30க்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 9.30க்கு கோவை வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...