லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் பம்புசெட் நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் தகவல்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டு பம்புசெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிர்பாராதது. மேலும், கோவையில் இயங்கிவரும் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும். சுமார் 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவையில் இயங்கிவரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மூலப் பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல கோடி பெறுமானமுள்ள பம்புசெட்டுகள் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சைமா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...