இரண்டாவது நாளாக பற்றி எரியும் வெள்ளலூர் குப்பை கிடங்கு - தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறை திணறல்

வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென நேற்று மதியம் தீ பரவியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு துறையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட இதர பணியாளர்கள் தொடர்ந்து போராடியும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைக்கும் பணிகள் நடந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து எரிகிறது.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகம் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.‌ இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் பணிகளும், குப்பை மூலம் உரம் தயாரிக்கும் பணிகளும் நடக்கிறது. தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் இங்கே குவிக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 லட்சம் டன் குப்பை இங்கே 100 ஏக்கருக்கு மேல் குவிந்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக குப்பை தரம் பிரிப்பு பணி முறையாக நடப்பதில்லை.

குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளலூர், போத்தனூர், செட்டிபாளையம், மேட்டூர், கோண வாய்க்கால்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து காணப்படுகிறது. குப்பைகளினால் இந்த பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பைகளை முறையாக தரம் பிரித்து கொட்ட வேண்டும். குப்பைகளை மண்டல அளவில் குப்பை மாற்று நிலையங்கள் மூலம் தரம் பிரித்து அகற்ற வேண்டும்.

வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு கொண்டு வரும் குப்பைகளின் அளவை வெகுவாக குறைக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் மூலமாக உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.‌ மாறாக குப்பை கிடங்கில் குப்பைகள் தீ பிடித்து எரிவது அடிக்கடி நடக்கிறது.‌ வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென நேற்று மதியம் தீ பரவியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு துறையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட இதர பணியாளர்கள் தொடர்ந்து போராடியும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைக்கும் பணிகள் நடந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து எரிகிறது. தீப்பிடிக்க என்ன காரணம் என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குப்பையில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாக தீ பிடித்திருக்கலாம். இல்லாவிட்டால் குப்பை தரம் பிரிக்கும் பணியில் உள்ளவர்கள் குப்பை கிடங்கிற்கு சென்று வரும் நபர்கள் மூலமாக தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குப்பை கிடங்கில் தீ பரவாமல் தடுக்க மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கு வளாகத்தில் தீயணைப்பு வாகனங்களும் மூன்று போர்வெல்களும் அமைக்கப்பட்டிருந்தது. குப்பைகளை தரம் பிரிக்க ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆட்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் எந்த பணியும் முறையாக நடக்கவில்லை. வெள்ளலூர் மாசு மீட்டு குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில் ," குப்பை பராமரிக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்த யுபிஎல் நிறுவனம் அதை சரியாக செய்யவில்லை . பயோ மைனிங் என்ற பெயரில் குப்பையை தரம் பிரிக்காமல் பெருந்தொகை பெறப்படுகிறது.

தற்போது பல ஏக்கரில் இரண்டு நாட்களாக குப்பை தீப்பற்றி எரிகிறது. தீயில் சாம்பலான பகுதியை தரம் பிரிக்கும் பணி என கணக்கு காட்டி யுபிஎல் நிறுவனம் உட்பட இரண்டு நிறுவனங்கள் சுமார் 20 கோடி ரூபாய் பெறுவதற்காக சதி செயல் செய்திருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது.‌ குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு மற்றும் கூடாரம் உருவாக்கப்பட்டது.

இதற்கான ஆண்டு வாடகை மாநகராட்சிக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகை கடந்த சில ஆண்டாக வழங்கப்படவில்லை. குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்காமல் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. இதையெல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...