கோவையில் உள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று கல்லூரி விழாவில் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு பேசியுள்ளார்.


கோவை: கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் பதினேழாவது கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் 04.04.2024 அன்று காலை நடைபெற்றது.



விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு பல்வேறு இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று அறிவுரை வழங்கினர். விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் அவர்கள் பேசும்போது நல்ல கல்வி பெற்று வாழ்வில் சிறந்த மனிதர்களாக மாணவர்கள் உருவாக இக்கல்லூரி எப்போதும் துணை நிற்கும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.

முன்னதாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர். சீ.ராஜு வரவேற்புரையும், அதனைத் தொடர்ந்து ஆண்டறிக்கையும் வாசித்தார். தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மூன்றாமாண்டு மாணவர்களுக்கு சுமார் 596 பணியாணைகள் முனைவர். சி. சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உங்களைப்போல் உங்கள் பெற்றோர்களோ, முந்தைய தலைமுறையினரோ படித்திருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் கல்விக்காக அவர்களின் தியாகம் மிகப் பெரியது. உங்கள் எதிர்கால வாழ்க்கை சுலபமானது அல்ல. அந்தச் சவால்களைச் சமாளிக்க இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் துணையோடு ஆயத்தமாகவேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...