கோவையில் உலகத்தரம் வாய்ந்த புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

புதிய உலகத் தரம் வாய்ந்த கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (CICS) அமைக்க திட்டம்  முன்வைக்கப்பட்டுள்ளது.  உலகின் மிக நவீனமான, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்திக் கட்டப்படும் ஸ்டேடியமாக இருக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்துள்ளார்.


 கோவை: சென்னையை அடுத்து முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில் சர்வதேச அளவில் விளையாட்டு வசதிகழ்ந்தெய்து தர வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கு சிக்ஸர் செய்தியாக வந்துள்ளது அமைச்சர் டிஆர்பி ராஜாவின் அறிவிப்பு. 

புதிய உலகத் தரம் வாய்ந்த கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (CICS) அமைக்க திட்டம்முன்வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா சற்றுமுன்அறிவித்துள்ளார். 

மான்செஸ்டர் ஆஃப் சவுத் இந்தியா, கல்வி மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கோவை, தொழில் முனைவோரின்

பிறப்பிடம் என்று கோவைக்கு பல்வேறு அங்கீகாரங்கள் இருந்து வரும் நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் கோவைக்கு வந்து கிரிக்கெட் விளையாடும் ஒரு வாய்ப்பை இந்த நகரம் பெறப்போகிறது. ஏற்கனவே, மூன்று TNPL டீம்களின் உரிமை கோவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மேற்பார்வையில், தமிழகத்தின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி கூடங்களின் உள் கட்டமைப்பு வசதிகள்,முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியம்,உலகின் மிக நவீனமான, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்திக் கட்டப்படும் ஸ்டேடியமாக இருக்கும், என்றார். 

Net-Zero வெளியீடுகளை அடைய முயற்சிக்கும் இந்த திட்டம், உள்ளூர் கிரிக்கெட் சூழலை வலுப்படுத்துவதோடு, பசுமை புதுமைகள், நீர் சேமிப்பு, மற்றும் காலநிலை முன்னோக்கிய சிந்தனையை முன்னுரிமை கொண்டதாக விளங்கும், என்றார். 

கோவையில்முன்மொழியப்பட்ட கிரிக்கெட் மைதானமானது, இப்பகுதியில் உள்ள விளையாட்டு திறமைகளை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல், நிலையான விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு புதிய உலகளாவிய அளவுகோலை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...