கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

தபால் வாக்கிற்கு விண்ணப்பித்த மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிலேயே இருந்து வாக்களிக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


கோவை: 2024 பாராளுமன்ற தேர்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில், இல்லத்திற்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த 20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 2570 மூத்த குடிமக்கள் வாக்காளர்களும், 424 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். இதே போன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 2085 மூத்த குடிமக்களும் மற்றும் 567 மாற்றுத் திறனாளிகளும் வாக்களிக்க உள்ளனர்.

ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க Poll Officer தலைமையின் கீழ் Micro Observer அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு 15 குழுக்களும், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு 15 குழுக்களும், கோவை (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு 14 குழுக்களும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு 21 குழுக்களும், வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் இன்று ஏப்ரல்.5 வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் (06.04.2024 மற்றும் 09.04.2024 ஆகிய தேதிகளில் மேற்படி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த வசதியினை பயன்படுத்தி ஏற்கனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம்.

படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச் சாவடிக்கு நேரில் சென்றுவாக்களிக்க இயலாது. எனவே தபால் வாக்கிற்கு விண்ணப்பித்த மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என கோவை மாவட்ட நிர்வாகம் இன்று ஏப்ரல்.5 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...