பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை பிஏபி வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு

பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வந்த பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலை பொத்தியம் பாளையம் பிரிவில் பிஏபி கிளை வாய்க்கால் செல்கிறது. (பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால்). பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பொத்தியம் பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இறந்து அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்து வந்த அந்த அடையாளம் தெரிய தெரியாத ஆண் குழந்தையை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காங்கயம் காவல் ஆய்வாளர் கூறியதாவது,அடையாளம் தெரியாத இந்த குழந்தை எங்கிருந்து தண்ணீரில் அடித்துவரப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் பொழுது பிறந்து 2 முதல் 4 நாட்களுக்குள் தான் இருக்கும் என்றும், குழந்தையை கடந்த 24 மணி நேரத்திற்குள் தான் தண்ணீரில் பெற்றோர்கள் வீசி எறிந்து இருக்க முடியும் என்றும் சந்தேகிக்கிறோம்.

மேலும் இந்த குழந்தையை பற்றிய தகவல் யாரேனும் அறிந்திருந்தால் உடனடியாக காங்கயம் காவல் ஆய்வாளர் (விவேகானந்தன் -94981 89123)ஐ அணுக வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...