கோவையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வரும் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி எம்பி ஆகியோர் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளனர்.


கோவை: கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், வருகிற 12-4-2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற தேர்தல்-2024, இந்தியா கூட்டணி திமுக கழக‌ கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி,

தேர்தல் பரப்புரை செய்ய‌ உள்ளார்கள்.



அதையொட்டி, கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ள இடத்தை, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை‌ அமைச்சர் சு.முத்துசாமி இன்று (ஏப்ரல்.5) பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், திமுக கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், திமுக கழக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...