குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மாருதி நகர் பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மாருதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாருதி நகர் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, மின்சார வசதி மற்றும் சாக்கடை வசதிகள் சரிவர செய்து தராததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கோடை காலம் என்பதால் குடிநீர் இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் பழுதாகும் மின்மோட்டார் களை சரி செய்து மீண்டும் இயக்கி வருகின்றனர். எனவே புதிய மின் மோட்டார்களை அமைத்து சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...