சின்னக்கம்பாளையத்தில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு - தேர்தலை புறக்கணிக்கபோவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட சின்னக்கம்பாளையம் ஆறாவது வார்டில் செயல்படும் தனியார் தாய் கோழிப்பண்ணையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவின் மீது கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்ததால் சுகாதார சீர்கேட்டின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வருகிறது எனவும், எனவே தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குடியிருப்புகளே இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை 57 குடும்பத்தினரும் புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...