டீசல், பெட்ரோல் மீதான வாட்வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 வருட பழைய வாகன இயக்கத்தடை, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய லாரி உரிமையாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடருமென தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை தேக்கமடைந்து இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...