திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பு

சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.



அப்போது இந்த நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறிவிட்டு மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு மோடி ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டிய செல்வப் பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்தியாவில் ஜனநாயக ஆட்சியா? நடக்கிறது. சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது, இந்த நாட்டில் மோடிக்கு ஒரு சட்டம், அண்ணாமலைக்கு ஒரு சட்டம், 140 கோடி மக்களுக்கு ஒரு சட்டமா? என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கச்சத்தீவை புதிதாக பேசுகிறீர்கள். இந்திரா காந்தி இந்த நாட்டு மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து தன் உயிரை தியாகம் செய்தவர். அவரைப் பேசுவதற்கு மோடிக்கும் எந்த தலைவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...