அவிநாசி அருகே தொரவலூரில் முனியப்பசாமி கோவில் பொங்கல் விழா – நேர்திகடனாக 500க்கும் மேற்பட்ட கிடாய்களை வழங்கிய பக்தர்கள்

பக்தர்கள் வழங்கிய 500க்கும் மேற்பட்ட கிடாய்களில் 150 கிடாய்களை வெட்டி பக்தர்களுக்கு அன்னதானமாக போடப்பட்டதாக கோட்டை முனியப்ப சாமி கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது.



கடந்த 18ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்வுடன் பொங்கல் திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில் பரவலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.



கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் வழங்கி இருப்பதாகவும், இதில் கோவில் அன்னதானத்திற்கு 150க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுபூஜையும் சைவ அன்னதானமும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...