உடுமலை அருகே குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

நேற்று மாலை 6:00 மணி அளவில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் ஈரோட்டில் இருந்து வந்த ஆறு பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக அணிக்கடவு கிரி உள்ளார். இவர் ராமச்சந்திராபுரம் ஊராட்சி அணிக்கடவு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6:00 மணி அளவில் இவரது வீட்டுக்கு ஈரோடு வருமானவரித்துறை சேர்ந்த அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த சோதனையில் எவ்வித ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...