உடுமலையில் சாவிகள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்

தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் சாவிகள் விற்கும் கடையை இப்ராஹிம் என்பவர் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் கடையில் இருந்து புகை வருகிறது என்று தகவல் கிடைத்த நிலையில் உடனே கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.



தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் முக்கிய சாலையில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...