உடுமலையில் சாவிகள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்

தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் சாவிகள் விற்கும் கடையை இப்ராஹிம் என்பவர் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் கடையில் இருந்து புகை வருகிறது என்று தகவல் கிடைத்த நிலையில் உடனே கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.



தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் முக்கிய சாலையில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...