தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுகக் கூட்டம்

அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பேசுகையில் அதிமுக தொண்டர்கள் நாம் வீடு வீடாக சென்று பணியாற்றிட வேண்டும். பழையபடி வீதியில் கொடியை கொண்டு சென்றால் எந்த காரியமும் நடக்காது. இந்த காரியத்தை செய்தால் மட்டுமே எடப்பாடியாருக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கூறியுள்ளார்.



அரசு வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என தெரிவித்தார். என்னுடைய தனிப்பட்ட சக்தியிலும் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, உங்கள் கிராமத்தில் ஒரு நலத்திட்டமாக இருந்தாலும் சரி அனைத்து பிரச்சினைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது எனது கடமை.



அந்தப் பணியை முழு நேர பணியாக ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் சேவையை நோக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சென்று கொண்டுள்ளேன். இந்த மக்கள் சேவை யாருக்கு என்றால் உங்களுக்குத்தான் முன்னுரிமை. ஒவ்வொரு தொண்டனுக்கும் தான் அதிமுக தொண்டர்கள் முழு பலத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வைத்தீர்கள் என்றால் நமது எடப்பாடியாருடன் சேர்ந்து என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வேன் என்று தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் முதலில் அனைத்து சலுகைகளும் தொண்டனுக்கு அதன் பிறகு தான் பொதுமக்களுக்கு என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...