ஆவராம்பாளையத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களிடம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டு என்று கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவராம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை இன்று (மார்ச்.30) நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



பின்னர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.



மேலும் பொதுமக்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் நலன்களை கனிவுடன் விசாரித்தும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அடிதட்டு மக்களின் தேவைகளை கேட்காமலே அனைத்தையும் செய்து கொடுத்துள்ள அதிமுக திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்குகளை சேகரித்தார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...