ஆவராம்பாளையத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களிடம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டு என்று கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவராம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை இன்று (மார்ச்.30) நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



பின்னர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.



மேலும் பொதுமக்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் நலன்களை கனிவுடன் விசாரித்தும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அடிதட்டு மக்களின் தேவைகளை கேட்காமலே அனைத்தையும் செய்து கொடுத்துள்ள அதிமுக திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்குகளை சேகரித்தார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...