பாஜக கூட்டணியில் கொலை குற்றவாளி ஜான் பாண்டியனுக்கு எம். பி சீட்..! - சித்தார்த் காளிங்கராயர் கடும் கண்டனம்..!

1993 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய  குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட  ஜான் பாண்டியனை, தென்காசி தொகுதி எம்.பி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று  காளிங்கராயர் குடும்பத்தின் சார்பாக சித்தார்த் காளிங்கராயர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற காளிங்கராயர் குடும்பத்தை சேர்ந்தவர் சித்தார்த் காளிங்கராயர். தங்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரை நடு ரோட்டில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த வழக்கின்  முக்கிய குற்றவாளியான ஜான் பாண்டியனை தென்காசி தொகுதி வேட்பாளராக பாஜக  அறிவித்துள்ளது  கண்டனத்துக்குரியது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று காலை 10.30 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து காரில் திரும்பிய பொழுது, எங்கள் குடும்பத்தை சேர்ந்த விவேக் காளிங்கராயர் என்பவரை  கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்தனர். 

இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மற்றும் வி.எல்.பி. பொறியியல் கல்லூரியின் தாளாளர் வெங்கடராம கிருஷ்ணன், மற்றும் கூலிப்படைத் தலைவன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  

இவ்வழக்கில், 2003 ஆம் ஆண்டு, ஜனவரி 6 ஆம் தேதி, கோவை முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதில்,  வெங்கடராம கிருஷ்ணன், கூலிப்படை  தலைவன், ஜான் பாண்டியன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய, டிரைவர் சுப்பிரமணியம் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஒரு கொலை குற்றவாளியின் கட்சியுடன் கூட்டணி என்பதே கண்டனத்துக்குரியதாக பார்க்கப்படும் போது, இன்னும் ஒரு படி மேலே போய் அந்த கொலை குற்றவாளியை ஒரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக போன்ற ஒரு கட்சி நியமிப்பது எங்களுக்கு மன உளைச்சலை தரும் விஷயமாகவே இருக்கிறது. 

அதுவும், மோடி போன்ற ஒரு பெரிய தலைவரின் தலைமையிலான பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏமாற்றத்தையும், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது", என்றார்.   

பாஜகவின் இந்த முடிவிற்கு தீவிரமாக கண்டனங்களை தெரிவித்த சித்தார்த் காளிங்கராயர், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களது நடத்தை மற்றும் குற்றப் பின்னணிகளை  ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...