கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி பேருந்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி பேருந்து உதவியாளர் சேவியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பல்வேறு வழித்தடங்களில் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட வழித்தடத்தில் பணியாற்றி வந்த பேருந்து உதவியாளர் சேவியர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று காலை குறிப்பிட்ட பகுதிக்கு வந்த பள்ளி பேருந்தை மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாம்பூர் போலீசார், பேருந்து உதவியாளர் சேவியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், பள்ளி பேருந்து உதவியாளர் சேவியருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் சேவியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பல்வேறு வழித்தடங்களில் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட வழித்தடத்தில் பணியாற்றி வந்த பேருந்து உதவியாளர் சேவியர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று காலை குறிப்பிட்ட பகுதிக்கு வந்த பள்ளி பேருந்தை மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாம்பூர் போலீசார், பேருந்து உதவியாளர் சேவியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், பள்ளி பேருந்து உதவியாளர் சேவியருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் சேவியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.