கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல்

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவாகரத்தில், பொறுப்பு பதிவாளர்கள் 2 பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில்முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பதிவாளர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், பேராசிரியர்கள் ஆறு பேர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர், சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் பணிபுரியும் நான்கு பேர் மீது கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...