ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பு மனு தாக்கலுக்குப் பின்பு திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேட்டி.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார்.



இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி,

தென்னை விவசாயிகளின் அடிப்படை கொப்பரை விலை கிடைக்கவும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்று பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஆனைமலையில் தொழில் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மக்களின் குடிநீர் தேவைக்கு ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும், தென்னை பயிற்சி மையம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...