கோவை திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் - செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

கோவை திமுக கிழக்கு மண்டலம்  52 ஆவது வட்டம் சார்பாக நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், எம்.பி  வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.


கோவை: கோவை திமுக கிழக்கு மண்டலம்52 ஆவது வட்டம் சார்பாக நேற்று (மார்ச் 24) செயல் வீரர்கள் கூட்டம், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள எஸ் கண்ணன் நினைவரங்கத்தில் நேற்று நடைபெற்றது. 

வரும் பாராளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள்விவாதித்தனர்.



இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன் வட்டச் செயலாளர் நாராயணன், தோழமைக் கட்சி நிர்வாகிகள் நாராயணசாமி (சிபிஐ), கல்யாணசுந்தரம் (சிபிஎம்), பாண்டியன் (சிபிஎம்), சிவக்குமார் (காங்கிரஸ்), மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் 52 வது வட்டக் கழக செயல் வீரர்கள், பாக முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...