கோவை துடியலூர் அருகே கள் இறக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..!

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு கூறினார்.


கோவை: கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியில் தோட்டத்தில் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கார்த்திக் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளகிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். இவரது மகன் கார்த்திக். இவர்கள் தங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் கள் இறக்கிக்கொண்டு இருக்கும் போது துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.

அதன்பிறகு கார்த்திக்கை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் விவசாயிகள் அனைவரும் துடியலூர் காவல்நிலையத்திற்கு வந்தனர்.



இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், வழக்குப் பதிவு செய்யப்பட்ட கார்த்திக் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கள் மற்றும் நீரா பானம் இறக்க அனுமதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை. தொடர்ந்து நாங்கள் அனுமதி கேட்டு வருகின்றோம். ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது, ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை இல்லை. கள் இறக்குதல் என்பது விவசாயிகளின் உரிமை போராட்டம் ஆகும். காவல்துறை தலையிட்டால் கடுமையான போராட்டம் செய்வோம் என்று கூறினர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...