கோவையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு..!

ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைத்து, சரிபார்க்கப்ப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது.


கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று (மார்ச்.20) இரவு முதல் நடைபெற்று வருகிறது. 



10 தொகுதிகளுக்கு தேவையான 3719 வாக்கு பதிவு இயந்திரங்கள், 3719 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4026 விவி பேட் இயந்திரங்கள் என 11,464 வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. 



ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டு, இயந்திரங்கள் சரிபார்க்கப்ப்படுகிறது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது. 

அதே போல, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...