உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவர்கள் நான்கு பேரை மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் கோவையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியா் அழைத்துச் சென்றார்.


கோவை: கோவை பீளமேடு அருகே மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் திக்ஷன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகியோர் 2023 - 2024 கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்று, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்த மாணவா்கள் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவா். மசக்காளிபாளையம் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்த தோ்வுகளில் யாரும் தோ்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 2023 - 2024ஆம் கல்வியாண்டில் இந்தத் தோ்வில் தோ்ச்சியடையும் மாணவா்களை, விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் க.மைதிலி மாணவா்களிடையே உறுதி அளித்திருந்தார்.



அதன்படி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற திக்சன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகிய நான்கு போ் மற்றும் இந்தத் தோ்வுக்கு பயிற்சியளித்த ஆசிரியைகள் சுகுணா, மேரி திவ்யா ஆகியோரையும் மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் கோவையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியா் க.மைதிலி (மார்ச்.18) அழைத்துச் சென்றார்.

இதில், கோவை சக்தி பல் மருத்துவமனை மருத்துவா் அசோக்குமார், ஒரு மாணவரின் விமானப் பயணச்செலவை ஏற்றுக் கொண்டார். விமானத்தில் பெங்களூா் அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்கள், விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், கா்நாடக சட்டப்பேரவை, திப்புசுல்தான் கோட்டை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு பின்னா் பேருந்தில் புறப்பட்டு நேற்று (மார்ச்.19) கோவை வந்தடைந்தனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...