வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கோவை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்புமனு தாக்கல் 27ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30ம் தேதி வேட்பு மனு திரும்பப்பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.



அதன்படி கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் நேற்று வேட்பாளர்களுக்கான எல்லை கோடுகள் 100 மீட்டர், 200 மீட்டர்களில் போடப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று (மார்ச்.20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...