வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கோவை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்புமனு தாக்கல் 27ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30ம் தேதி வேட்பு மனு திரும்பப்பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.



அதன்படி கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் நேற்று வேட்பாளர்களுக்கான எல்லை கோடுகள் 100 மீட்டர், 200 மீட்டர்களில் போடப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று (மார்ச்.20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...