வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கோவை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்புமனு தாக்கல் 27ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30ம் தேதி வேட்பு மனு திரும்பப்பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.



அதன்படி கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் நேற்று வேட்பாளர்களுக்கான எல்லை கோடுகள் 100 மீட்டர், 200 மீட்டர்களில் போடப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று (மார்ச்.20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...