கோவையில் கோலம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்துணவு அமைப்பாளர்கள்

ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில், மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு இன்று (மார்ச்.19) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில், மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு இன்று (மார்ச்.19) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



அந்தக் கோலங்களில் "வாக்களிப்பது கடமை அதுவே நமது உரிமை, வாக்கின் வலிமை தேசத்தின் பெருமை, ஒரு விரலில் சரித்திரம் படைப்போம், (19.04.2024) வாக்களிக்கும் நாள், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல நாட்டிற்கான எனது முதல் வாக்கு" உள்ளிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் அவர்கள் வரைந்த இரண்டு ஓவியங்களிலும் தேர்தலை குறிப்பிடும் வகையில் வாக்களிக்கும் இயந்திரம் தேசியக்கொடி, வாக்கு மை, தேசிய கொடி, இந்தியா வரைப்படம், முக கவசம் அணிந்த வாக்காளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஓவியங்களை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வ சுரபி நேரில் பார்வையிட்டார்.

Newsletter

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...